மத்திய கிழக்கு நாட்டிலும் கால் பதித்த Omicron வைரஸ்!
உலக நாடுகள் அனைத்தும் அச்சுறுத்தி வரும் Omicron கொரோனா வைரஸ் மத்திய கிழக்கு நாட்டிலும் கால் பதிக்க தொடங்கியுள்ளது.
குறித்த வைரஸானது தென் ஆப்பிரிக்காவில் கடந்த மாதம் 24-ஆம் திகதி கண்டறியப்பட்டிருப்பட்டது. மேலும் இந்த வைரஸால் உலக நாடுகள் மிகவும் அச்சத்துடன் உள்ளனர். இதற்கு காரணம், இதுவரை கண்டறியப்பட்டுள்ள உருமாறிய வைரஸ்களான ஆல்பா, பீட்டா, காமா, டெல்டா வைரஸ்களை விட இந்த புதிய உருமாறிய வைரஸ், அதிபயங்கரமானது.
இந்த வைரஸ் 50 பிறழ்வுகளை கொண்டுள்ளது என மருத்துவ விஞ்ஞானிகள் கருதுகின்றனர். Omicron என்று இந்த வைரசுக்கு உலக சுகாதார நிறுவனம் பெயரிட்டு, அதன் நிபுணர் குழு இந்த வைரஸை இரவு பகலாக ஆராய்ச்சியை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த ஒரு வார காலத்திற்குள் 14-க்கும் மேற்பட்ட நாடுகளில் Omicron வைரஸ் பரவ தொடங்கியுள்ளது. ஐரோப்பிய நாடுகளில் வேகமாக பரவிய ஒமிக்ரான் கொரோனா வைரஸ் மத்திய கிழக்கு நாட்டிலும் பரவ தொடங்கியுள்ளது.
இதேவேளை வடக்கு ஆப்பிரிக்காவில் இருந்து சவுதி அரேபியாவுக்கு வந்தவருக்கு Omicron கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், அவரும் அவருடன் தொடர்பில் இருந்தவர்களும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். முன்னதாக கடந்த வாரம் 7ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து விமானங்களுக்கு சவுதி அரேபியா தடை விதித்து இருந்தது.