கனடாவின் முக்கிய பகுதியில் இருளில் தத்தளித்த ஆயிரக்கணக்கானோர்
கனடாவின் ஒன்ராறியோவில் வீசிய சக்திவாய்ந்த புயல் காரணமாக மூவர் மரணமடைந்துள்ளதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.
குறித்த புயல் காரணமாக சுமார் 350,000 மக்கள் இருளில் தத்தளித்ததாக தகவல் தெரிய வந்துள்ளது. மேலும், மரங்கள் வேரோடு சாய்ந்ததுடன், மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே பிராம்டனில் நடந்து சென்றுகொண்டிருந்த 70 வயது கடந்த பெண் ஒருவர் மீது மரம் சரிந்து விழுந்ததில் படுகாயமடைந்து, மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில் அவர் மரணமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Pinehurst ஏரி பகுதியில் மரம் சரிந்து விழுந்ததில் ஒருவர் மரணமடைந்ததுடன், இருவர் காயமடைந்ததாக பொலிஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புயலின் போது ஒருவர் இறந்தார் என ஒட்டாவா பொலிசார் சனிக்கிழமை மாலை உறுதிப்படுத்தினர், இருப்பினும் அவர்களின் இறப்பு தொடர்பான விவரங்கள் உடனடியாக வெளியிடப்படவில்லை.
இதனிடையே, ரொறன்ரோ பகுதியில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது. ஆனால் பாதிக்கப்பட்டவர்கள் தொடர்பில் தகவல் ஏதும் வெளியிடப்படவில்லை.