வெளிநாடொன்றில் மீண்டும் அவசரநிலைக்கு வாய்ப்பு! எச்சரிக்கை விடுத்த அரசு
இஸ்ரேலில் புதிய வகை கொரோனா வைரஸ் தொற்றால் மீண்டும் அவரச நிலைக்கு வாய்ப்பு உள்ளதாக அந்நாட்டு பிரதமர் நப்தாலி பென்னட் (Naftali Bennett) எச்சரிக்கை தகவலை வெளியிட்டுள்ளார்.
மலாவியில் இருந்து இஸ்ரேல் திரும்பிய பயணி ஒருவருக்கு புதிய வகை கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக இஸ்ரேல் அரசாங்கம் தகவல் வெளியிட்டுள்ளது.
இது தொடர்பாக இஸ்ரேல் சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தது,
புதிய கொரோனா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்ட நபர் மற்றும் 2 பயணிகள் உடனடியாக தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அவர்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்திகொண்டவர்கள் என தெரிவித்தனர்.
இதனை அடுத்து புதிய வகை கொரோனா வைரஸ் குறித்து விவாதிக்க இஸ்ரேல் பிரதமர் நப்தாலி பென்னெட் (Naftali Bennett) உடனடியாக அமைச்சரவையை கூட்டினார். அதில், இது டெல்டா மாறுபாட்டை விட மிகவும் தொற்றுநோயாகவும் வேகமாகவும் பரவுவதாகவும் அவர் கூறினார்.
மேலும் இந்த புதிய கொரோனா வைரஸ் தடுப்பூசிகளுக்கு கட்டுப்படுமா? அல்லது ஆபத்தானதா என்பது குறித்த தகவல்களை அதிகாரிகள் சேகரித்து வருவதாக அவர் தெரிவித்தார்.
இதேவேளை, நாம் தற்போது அவசரகால விளிம்பில் இருக்கிறோம். அனைவரும் தயாராக இருக்குமாறும், 24 மணி நேரமும் பணியில் முழுமையாக ஈடுபடுமாறும் இஸ்ரேல் பிரதமர் மந்திரிகளை கேட்டுக்கொண்டுள்ளார்.