வெளிநாடொன்றில் பயங்கர விபத்து சம்பவம்: 30 பேர் பரிதாபமாக உயிரிழப்பு
பாகிஸ்தானில் பேருந்தும் - காரும் நேருக்கு நேர் மோதியதில் அருகில் இருந்த பள்ளத்தாக்கில் விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
பாகிஸ்தானில் கில்கித்-பல்திஸ்தான் மாகாணம் கில்கித்தில் இருந்து ராவல்பெண்டி நோக்கி நேற்றிரவு பயணிகள் பஸ் சென்றுகொண்டிருந்தது.
டைமிர் மாவட்டம் ஷதில் பகுதியில் மலைப்பாங்கான சாலையில் சென்றுகொண்டிருந்தபோது எதிரே வந்த கார் மீது பஸ் நேருக்கு நேர் பயங்கரமாக மோதியுள்ளது.
இந்த விபத்தில் பஸ்சும், காரும் மலையில் இருந்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
மேலும் இந்த விபத்து சம்பவத்தில் 30 பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் படுகாயமடைந்திருப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இரவு நேரம் என்பதால் மீட்பு பணியில் தாமதம் ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து மீட்புப்பணிகள் நடைபெற்று வரும் நிலையில் படுகாயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விபத்துக்கான காரணம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணையை நடத்தி வருகின்றனர்.