நின்றுகொண்டிருந்த ரயில் மீது வேகமாக மோதிய பயணிகள் ரயில்: 500 பேருக்கு ஏற்பட்ட நிலை!
சீனாவில் தண்டவாளத்தில் நின்றுகொண்டிருந்த ரயில் மீது மற்றொரு பயணிகள் ரயில் மோதி விபத்துக்குள்ளானதில் 500 க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சீனாவின் பீஜிங் மாகாணம் ஷங்பிங் நகரில் இருந்து புறப்பட்ட பயணிகள் ரயில் ஒன்று தண்டவாளத்தில் பனி படர்ந்திருந்ததால் தானியங்கி பிரேக்கிங் அமைப்பால் நடுவழியில் நிறுத்தப்பட்டது.
அப்போது, அதே தண்டவாளத்தில் மற்றொரு பயணிகள் ரயில் வந்துள்ளது. அந்த ரயில் நின்றுகொண்டிருந்த ரயில் மீது வேகமாக மோதியது.
தண்டவாளத்தில் பனி படந்திருந்ததால் பின்னால் வந்த ரயிலில் பிரேக் பிடித்தும் ரயில் சறுக்கிக்கொண்டு நின்றுகொண்டிருந்த ரயில் மீது மோதியுள்ளது.
இந்த விபத்தில் 2 ரயில்களில் பயணித்த 500க்கும் மேற்பட்ட பயணிகள் படுகாயமடைந்தனர்.
தகவலறிந்து விரைந்து வந்த மீட்புக்குழுவினர் படுகாயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
இந்த விபத்தில் 102 பேருக்கு எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.