நியூசிலாந்தில் திடீரென வீடுகளை காலிசெய்யும் மக்கள்!
நியூசிலாந்தில் இன்றைய தினம் (14-02-2023) அதிகாலையில் புயல் வீசக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுவதால், கிழக்கு கடற்கரையோரத்தில் வசிக்கும் மக்கள் வெளியேற உத்தரவிடப்பட்டுள்ளது.
கேப்ரியல் புயலானது நியூசிலாந்தில் கடற்கரையை நெருங்குகிறது.
புயல் காரணமாக மிகப்பெரிய நகரமான ஆக்லாந்திலும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் வசிப்பவர்கள் அதிக கனமழை, வெள்ளம் மற்றும் பலத்த காற்று போன்றவற்றுக்குத் தயாராக இருக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
கேப்ரியல் புயல் தற்போது ஆக்லாந்திற்கு வடகிழக்கே 200 கிமீ (125 மைல்) தொலைவில் அமர்ந்து. அடுத்த 24 மணித்தியாலத்தில் கிழக்கு கடற்கரைக்கு அருகில் நகரும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக நேற்று (13-02-2023) ஆக்லாந்து மற்றும் மேல் வடக்கு தீவு முழுவதும் பல பள்ளிகள் மற்றும் உள்ளூர் அரசாங்க வசதிகள் மூடப்பட்டன,
மேலும் மக்கள் முடிந்தால் பயணம் செய்ய வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்பட்டனர்.
இன்று அதிகாலையில் புயல் வீசக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுவதால், கிழக்கு கடற்கரையோரத்தில் வசிக்கும் மக்கள் வெளியேற உத்தரவிடப்பட்டுள்ளது.
46,000 வீடுகளுக்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது, சில பகுதிகளில் தொலைபேசி சேவை பாதிக்கப்பட்டுள்ளது.