மூடாமல் இருந்த லண்டனின் புகழ்ப்பெற்ற பிரிட்ஜ்: ஆச்சரித்துடன் பார்த்த மக்கள்!
பிரித்தானியா தலைநகர் லண்டனில் உள்ளது புகழ் பெற்ற டவர் பிரிட்ஜ் (Tower Bridge). 1894ல் பாஸ்க்யூல் முறையில் அமைக்கப்பட்டது.
லண்டன் டவர் சுற்றுலா தலத்திற்கு அருகே தேம்ஸ் நதியின் குறுக்கே டவர் ஹாம்லெட்ஸ் மற்றும் சவுத்வார்க் ஆகிய இரு பகுதிகளை இணைக்கும் வகையில் கட்டப்பட்டது.
நதியில் சிறு கப்பல்கள் வரும்போது இது திறந்து மூடும் வகையில் கட்டப்பட்டுள்ளதால், பிரித்தானியாவிற்கு வரும் சுற்றுலா பயணிகள் காண விரும்பும் இடங்களில் இதுவும் ஒன்றாக கருதப்படுகிறது.
நேற்று மாலை 01:15 மணியளவில் அதன் கீழ் ஒரு படகு சென்றது. அது சென்றவுடன் வழக்கம் போல் திறந்த அந்த பாலம் மூடி கொள்ளவில்லை.
இதனை கண்ட அங்கிருந்த பார்வையாளர்கள் ஆச்சரியமடைந்து நடப்பதை பார்த்து கொண்டிருந்தனர். மேலும் சுமார் அரை மணித்தியாலம் கழித்துத்தான் அது மீண்டும் மூடி கொண்டது.
அந்த பாலத்தின் ஹைட்ராலிக் அமைப்பில் ஏற்பட்ட கோளாறினால் அதனால் சிறிது நேரம் மூடி கொள்ள இயலாமல் போனதாக தெரிவிக்கப்பட்டது.