இலங்கையுடன் நிரந்தர தொடர்பில் இருக்கிறோம்! இந்தியா வெளியிட்ட தகவல்
இலங்கையில் இடம்பெறுகின்ற அபிவிருத்திகள் மற்றும் இந்தியாவின் பாதுகாப்பு விளைவுகள் தொடர்பாக, உன்னிப்பாக அவதானம் செலுத்தி வருவதாக இந்திய அரசாங்கம் தெரிவித்துள்ளது
. இந்திய வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் அரிந்தம் பக்சி (Arindam Bagchi) நடத்திய இணையவழி ஊடான சந்திப்பில், செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
இலங்கையில் கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டம் மூலம் அண்மையில் நிறைவேற்றப்பட்டிருந்தது.
இது இந்தியாவின் பாதுகாப்பு தொடர்பாக எவ்வகையான விளைவை ஏற்படுத்தும் என கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் அரிந்தம் பக்சி, இந்த விடயம் குறித்து இலங்கை அரசாங்கத்துடன் நிரந்தர தொடர்பில் இருப்பதாக கூறினார்.
அத்துடன் இலங்கை அரசாங்கமானது இந்தியாவுடனான மிகச்சிறந்த ஒத்துழைப்புகள் குறித்தும், இலங்கையும் இந்தியாவும் பகிர்ந்து கொண்டுள்ள சூழலின் பாதுகாப்பு தொடர்பிலும் மனதில் இறுத்தி செயற்படும் என தாம் நம்புவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.