பெருவின் முதல் பெண் ஜனாதிபதி பதவியேற்பு!
பெருவின் முதல் பெண் ஜனாதிபதியாக 60 வயதான டினா பொலுவார்டே (Dina Boluarte) பதவியேற்றுள்ளார்.
இடதுசாரித் தலைவர் பெட்ரோ காஸ்டிலோ பதவி நீக்கம் செய்யப்பட்டு கைது செய்யப்பட்டதை அடுத்து அவர் (Dina Boluarte) பதவியேற்றார்.
நேற்று பிற்பகல் எதிர்க்கட்சித் தலைமையிலான சட்டமன்றம் காஸ்டிலோவை அகற்றுவதற்கு ஆதரவாக வாக்களித்தது.
அவர் முந்தைய நாள் சட்டமன்றத்தை தற்காலிகமாக’கலைத்து ஆணை மூலம் ஆட்சி செய்யும் திட்டத்தை அறிவித்தார்.
இது, பெருவில் சட்டத்தின் ஆட்சி மற்றும் ஜனநாயகத்தை மீண்டும் நிலைநிறுத்துவதை நோக்கமாகக் கொண்ட நடவடிக்கை என காஸ்டிலோ கூறினார்.
ஆனால் இது எதிர்க்கட்சித் தலைவர்கள் மற்றும் அவரது துணை ஜனாதிபதி போலுவார்டே உட்பட மற்றவர்களால் சதிப்புரட்சி முயற்சி என பரவலாகக் கண்டனம் செய்யப்பட்டது.
இதனால், எதிர்க்கட்சித் தலைமையிலான சட்டமன்றம் காஸ்டிலோவை அகற்றுவதற்கு ஆதரவாக வாக்களித்ததையடுத்து, துணை ஜனாதிபதி டினா பொலுவார்டேவை (Dina Boluarte) பொறுப்பேற்க காங்கிரஸ் அழைப்பு விடுத்தது.
இதற்கமைய டினா பொலுவார்டே (Dina Boluarte) தென் அமெரிக்க தேசத்தை வழிநடத்தும் முதல் பெண்மணி என்ற பெருமையுடன் ஜனாதிபதியானார்.
அதோடு டினா பொலுவார்டே (Dina Boluarte) 2026ஆம் ஆண்டு வரை ஜனாதிபதியாக இருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.