மோப்ப நாயை சுட்ட நபரை தேடிவந்த பொலிசார்... அவர் சிக்கியபோது நிகழ்ந்த பரிதாபம்
கனடாவின் ஆல்பர்ட்டாவில், பொலிஸ் நாய் ஒன்றை சுட்டுக்கொன்ற ஒருவரை பொலிசார் தேடிவந்தார்கள். நேற்று அந்த நபர் பொலிசாரிடம் சிக்கினார்.
ஆனால், அவர் அப்போது படுகாயமடைந்திருந்தார். அவசர உதவிக்குழுவினர் அவருக்கு சிகிச்சையளித்தும் அவரைக் காப்பாற்ற முடியவில்லை.
உயிரிழந்த அந்த நபர், Gift Lake Métis Settlement பகுதியைச் சேர்ந்த Lionel Grey (29) என அடையாளம் காணப்பட்டுள்ளது.
அவர் பொலிசாரால் தேடப்பட்டுவந்தவர் என்று மட்டும் கூறியுள்ள பொலிசார், எதனால் அவருக்கு காயம் ஏற்பட்டது என்பது குறித்தோ, அவர் எப்படி இறந்தார் என்பது குறித்தோ எதுவும் தெரிவிக்கவில்லை.