முடியாத போர்; அதிகபட்ச ராஜாங்க நடவடிக்கையை கையில் எடுத்த ஜெலன்ஸ்கி!
அதிகபட்ச ராஜாங்க நடவடிக்கையில் ஈடுபட உள்ளதாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி(Volodymyr Zelenskyy) தெரிவித்துள்ளார்.
உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து 3 மாதங்களை எட்ட உள்ளது. ஆனாலும், ரஷ்யா ராணுவத்துக்கு எதிராக உக்ரைனும் சளைக்காமல் பதிலடி கொடுத்து வருகிறது.
இந்த நிலையில் தற்போது அதிகபட்ச ராஜாங்க நடவடிக்கையில் ஈடுபட உள்ளதாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி(Volodymyr Zelenskyy) தெரிவித்துள்ளார்.
இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சனுடன் பேசியதாகவும் உக்ரனைலிருந்து விவசாயப் பொருட்கள் ஏற்றுமதி செய்வதையும் மற்றும் எரிபொருள் இறக்குமதி செய்வதையும் அதிகரிக்க முயற்சி செய்வதாக அவர் தெரிவித்தார்.
மேலும் துறைமுக நகரமான ஒடெசாவை ரஷ்யப் படைகள் முடக்கியுள்ளது குறித்து இருநாட்டு தலைவர்களும் விவாதித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.