ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தடை!
2035 ஆம் ஆண்டில் ஐரோப்பிய ஒன்றியத்தல் பெற்றோல் மற்றும் டீசல் கார்களை விற்பனை செய்வதற்கு தடை விதிக்கும் சட்டமூலத்தை ஐரோப்பிய நாடாளுமன்றம் இன்று அங்கீகரித்தது.
ஐரோப்பிய ஒன்றியத்தில் அங்கம் வகிக்கும் நாடுகள் ஏற்கெனவே இச்சட்டமூலத்தை அங்கீகரித்துள்ளன. இந்நிலையில் ஐரோப்பிய நாடாளுமன்றமும் இன்று அங்கீகாரம் வழங்கியது.
ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் இதற்கான வாக்கெடுப்பு நடத்தப்பட்டபோது 340 எம்.பிகள் ஆதரவாக வாக்களித்ததுடன் 279 பேர் எதிராக வாக்களித்தனர்.
அதேவேளை 21 பேர் வாக்களிப்பில் பங்குபற்றவில்லை. இச்சட்டத்தின்படி, 2035 ஆம் ஆண்டின்பின் பெற்றோல் அல்லது டீசல் மூலம் இயங்கும் புதிய கார்களை விற்பனை செய்ய முடியாது.
எனினும், ஏற்கெனவே பாவனையிலுள்ள பெற்றோல், டீசல் கார்களை தொடர்ந்தும் பயன்படுத்த முடியும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.