அதிபர் புட்டின் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!
ரஷ்யாவுடன் இணைக்கப்பட்ட யுக்ரைன் பிராந்தியங்களில் இராணுவ சட்டம் இன்று முதல் அமுல்படுத்தப்படுவதாக ரஷ்ய ஜனாதிபதி புட்டின்(Vladimir Putin) தெரிவித்துள்ளார்.
சிறப்பு இராணுவ நடவடிக்கை என கூறி யுக்ரைன் மீது ரஷ்யா போரை ஆரம்பித்து 8 மாதங்களாகிறது.
இந்த போரில் யுக்ரைனிடமிருந்து ஆக்கிரமித்த லுஹான்ஸ்க், டோனெட்ஸ்க், கெர்சன், ஜபோரிஜியா ஆகிய 4 பிராந்தியங்களை அண்மையில் ரஷ்யா தன்னுடன் இணைத்துக்கொண்டது.
இது சர்வதேச சட்டத்தை மீறும் செயல் என உலக நாடுகள் கண்டனம் தெரிவித்தன. இதையடுத்து, சட்டவிரோதமாக இணைக்கப்பட்ட அந்த 4 பிராந்தியங்களையும் ரஷ்யாவிடம் இருந்து மீட்டெடுக்க யுக்ரைன் இராணுவம் கடுமையாக போராடி வருகிறது.\
இந்த நிலையில் ரஷ்யாவுடன் இணைக்கப்பட்ட யுக்ரைனின் 4 பிராந்தியங்களிலும் ரஷ்ய ஜனாதிபதி புட்டின் (Vladimir Putin) இராணுவ சட்டத்தை அமுல்படுத்தியுள்ளார்.
இதன்போது இராணுவ சட்டத்தின் கீழ் எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்து புட்டின்(Vladimir Putin) குறிப்பிடவில்லை.
அதே சமயம் இந்த உத்தரவு இன்று முதல் அமுலுக்கு வருவதாக அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.