உலக எண்ணெய் மற்றும் எரிசக்தி சந்தைகளில் போர் தாக்கம்
ரஷ்ய நிறுவனங்கள் தற்போதைய போர் மற்றும் எரிசக்தி சந்தை சூழ்நிலையை “பயன்படுத்திக் கொள்ள வேண்டும்” என ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் அறிவுறுத்தியுள்ளார்.
கிரேம்லினில் நடைபெற்ற கூட்டத்தில், புடின் இந்தப் போர் உலகளாவிய எரிசக்தி நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளதாக கூறியுள்ளார்.
மேலும், ஹோர்மூஸ் நீரிணை வழியாகப் போக்குவரத்துக்குட்பட்ட எண்ணெய் உற்பத்தி விரைவில் முழுமையாக நிறுத்தப்படக்கூடும் என எச்சரித்தார்.

நீண்டகால பணிகளில் ஈடுபட தயாராக இருக்க வேண்டும் என புடின் கூறியுள்ளார்.
ரஷ்யா நம்பகமான கூட்டாளிகளுக்கு எரிசக்தி வளங்களை வழங்குவதில் தொடரும் என்றும் அவர் கூறினார்
. ரஷ்யா உலகின் இரண்டாவது பெரிய எண்ணெய் ஏற்றுமதி நாட்டாகும் மற்றும் உலகின் மிகப்பெரிய இயற்கை வாயு வளத்தைக் கொண்டுள்ளது.