பரிசாக வந்த பாண்டா கரடிகளுக்கு ராஜ மரியாதை அளித்த நாடு!

Shankar
Report this article
22-வது பிபா உலக கோப்பை கால்பந்து போட்டியையொட்டி கத்தார் அரசாங்கத்திற்கு சீனா ஒரு பரிசு ஒன்றை அனுப்பியுள்ளது.
22-வது பிபா உலக கோப்பை கால்பந்து போட்டி நவம்பர் 20-ம் திகதி கத்தாரில் தொடங்குகிறது. இதற்கான முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இந்தப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ள 32 அணிகள் 8 பிரிவாகப் பிரிக்கப்பட்டுள்ளன. உலக கோப்பையை நடத்தும் கத்தார், ஈகுவடார் அணிகள் நவம்பர் 20-திகதி மோதுகின்றன.
இந்த நிலையில், உலக கோப்பை கால்பந்து போட்டியையொட்டி கத்தார் அரசுக்கு சீனா ஒரு பரிசு ஒன்றை அனுப்பியுள்ளது.
அந்த பரிசு ஒரு ஜோடி பாண்டாக் கரடிகள். அடுத்த மாதம் கால்பந்து போட்டி தொடங்க உள்ள நிலையில் கத்தாருக்கு பரிசு ஒன்றை அனுப்பி சீனா தனது அன்பை வெளிப்படுத்தியுள்ளது.
அந்த பாண்டா கரடிகளுக்கு கத்தார் அரசு ராஜ மரியாதை அளித்தது. இந்த பாண்டாக்கள் சீனாவின் சுச்சுவன் மாகாணத்தில் அடர்ந்த காடுகளில் மட்டுமே இருக்கும்.
ஆனால் கத்தார் ஒரு பாலைவன தேசம் என்பதால் அங்கிருக்கும் தட்பவெட்ப நிலைகள் பாண்டாக்களுக்கு ஒத்துவராது.
ஆனால் சீனாவின் பரிசை பெற்ற கத்தார் அரசு பாண்டாக்களுக்கு ஏற்ற மாதிரி சீனாவின் அடர்ந்த காடுகளில் நிலவும் காலநிலை இருக்குமோ அதே காலநிலையை பிரத்யேகமாக வடிவமைத்துள்ளனர்.
மேலும் அந்த பாண்டா கரடிகளுக்கு ஒவ்வொரு வாரமும் கிட்டத்தட்ட 800 கிலோகிராம் மூங்கில்களை உணவாக அளிக்க கத்தார் அரசு செய்துள்ளது.
இரண்டு பாண்டா கரடிகளில் ஒன்று 4 வயது ஆன ஆண். மற்றொன்று 3 வயதான பென் பாண்டா ஆகும். மேலும் கத்தார் நாட்டுக்கு சீனாவின் தேசிய விலங்கு பாண்டாக்கள் வருவது இதுவே முதல் முறையாகும்.