“மீட்பு நடவடிக்கையா? யுரேனியம் திருட்டா?” ; ஈரான் கடும் குற்றச்சாட்டு
அமெரிக்க வான்படை வீரர் ஒருவரை மீட்பதற்காக அமெரிக்கா அண்மையில் முன்னெடுத்த இராணுவ நடவடிக்கை, உண்மையில் ஈரானின் "செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை" (Enriched Uranium) திருடுவதற்கான ஒரு மறைமுகத் திட்டமே என ஈரான் வெளியுறவு அமைச்சு பகிரங்கமாகக் குற்றம் சாட்டியுள்ளது.
அமெரிக்கா தனது இராணுவ வீரரை மீட்கும் போர்வையில், ஈரானின் அணுசக்தி நிலையங்கள் அல்லது பாதுகாக்கப்பட்ட பகுதிகளிலிருந்து செறிவூட்டப்பட்ட யுரேனியத்தைக் கைப்பற்ற முயற்சித்துள்ளதாக ஈரான் தெரிவித்துள்ளது.

இது ஒரு மனிதாபிமான மீட்பு நடவடிக்கை அல்ல, மாறாக ஈரானின் தேசிய வளங்களைத் திருடுவதற்கான திட்டமிட்ட சதி என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அமெரிக்க வான்படை வீரர் ஒருவரை மீட்பதற்காக அமெரிக்கப் படைகள் அண்மையில் ஒரு விசேட நடவடிக்கையை முன்னெடுத்திருந்தன.
எனினும், அந்த நடவடிக்கையின் உண்மையான நோக்கம் ஈரானின் அணுசக்தித் திறனை முடக்குவதும், அங்கிருக்கும் முக்கிய மூலப்பொருட்களைக் கடத்துவதுமே என ஈரான் தற்போது புதிய ஆதாரங்களை முன்வைத்துள்ளது.
ஏற்கனவே 38 நாட்களைக் கடந்து போர் தீவிரமடைந்து வரும் நிலையில், ஈரானின் இந்த அறிவிப்பு சர்வதேச அரங்கில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அணுசக்தி விவகாரத்தில் அமெரிக்காவின் இந்தத் தலையீடு போரின் போக்கை மேலும் சிக்கலாக்கும் என அரசியல் ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர்.