உக்ரைன் கோர்ட்டில் இன்று ரஷ்ய வீரர்களுக்கு தீர்ப்பு!
ரஷ்யா உக்ரைன் இடையேயான போரின், முதலாவது போர்க்குற்ற விசாரணையில் தீர்ப்பு இன்று வழங்கப்படவுள்ளது.
உக்ரைன் தலைநகர் கீவில் உள்ள நீதிபதிகள் குழு, போர்க்குற்ற விசாரணையில் இன்று தீர்ப்பு வழங்கவுள்ளது.
21 வயது ரஷ்ய ராணுவ வீரர், உக்ரைன் மீதான ரஷ்ய படையெடுப்பின் ஆரம்ப கட்டத்தில், நிராயுதபாணியான உக்ரைன் நாட்டை சேர்ந்த 62 வயது மூதாட்டியை கொன்றதாக போர் குற்றவாளியாக கைது செய்யப்பட்டார்.
இந்நிலையில், அவர் தன்னுடைய குற்றத்தை ஒப்புக்கொண்டார். தன் மீதான அழுத்தத்தின் காரணமாக அவ்வாறு செய்துவிட்டதாக அவர் கோர்ட்டில் முன்னதாக தெரிவித்தார்.
அனைத்து தண்டனை நடவடிக்கைகளையும் ஏற்றுக்கொள்வதாகவும் தெரிவித்தார்.
மேலும் அவர் கூறியதாவது, "நான் உண்மையாக வருந்துகிறேன். அந்த சம்பவம் நடக்க நான் விரும்பவில்லை, நான் அங்கு இருக்க விரும்பவில்லை, ஆனால் அது நடந்தது. மீண்டும் ஒருமுறை மன்னிப்பு கேட்க விரும்புகிறேன்.
இதற்காக அனைத்து தண்டனை நடவடிக்கைகளையும் ஏற்றுக்கொள்ளத் தயார்" என்றார். போர் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை வழங்க வேண்டும் எனக் கேட்ட வழக்கறிஞர்கள், இது ஒரு கிரிமினல் குற்றம் என்பதை நன்கு அறிந்துகொண்டே அவர் இந்த செயலை செய்தார் எனத் தெரிவித்துள்ளனர்.
மேலும் இந்த போர்க்குற்ற விசாரணையில் உக்ரைன் கோர்ட்டு இன்று தீர்ப்பு வழங்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.