இலங்கை இராணுவ தளபதி சவேந்திர சில்வா திடீர் இராஜினாமா!
தனது பதவியை சவேந்திர சில்வா இராஜினாமா செய்யவுள்ள நிலையில் புதிய இராணுவ தளபதியாக மேஜர் ஜெனரல் விக்கும் லியனகே நிமிக்கப்படவுள்ளார்.
எதிர்வரும் 31 ஆம் திகதி முதல் தனது பதவியை இராஜினாமா செய்வதாக இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா அறிவித்துள்ளார்.
இதையடுத்து, எதிர்வரும் ஜுன் மாதம் முதலாம் திகதி தொடக்கம், பாதுகாப்பு படைகளின் புதிய பிரதானியாக சவேந்திர சில்வா கடமைகளைப் பொறுப்பேற்க உள்ளார்.
இந்நிலையில் சவேந்திர சில்வாவின் வெற்றிடத்திற்கு , மேஜர் ஜெனரல் விக்கும் லியனகே, எதிர்வரும் முதலாம் திகதி, புதிய இராணுவத் தளபதியாக பதவியேற்பார் என இராணுவம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் கோட்டாபயவின் மிகவும் நம்பிக்கைக்குரியவரான சவேந்திர சில்வாவின் இந்த திடீர் முடிவு தென்னிலங்கையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இலங்கை இராணுவ கட்டமைப்பிலும் சவேந்திர சில்வாவின் திடீர் இராஜினாமா பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அதேசமயம் இராணுவத்தளபதி சவேந்திர சில்வாவின் இந்த திடீர் முடிவுக்கு பின்னால் அமெரிக்கா உள்ளதாக தகவல்கள் கூறுகின்றமை குறிப்பிடத்தக்கது.