ரஷிய தாக்குதல்களில் ஏழு பேர் பலி; 34 பேர் காயம்
உக்ரைன் மீது ரஷியா 39-வது நாளாக தாக்குதல் நடத்தி வரும் நிலையில், கார்கிவ் மீது ரஷிய நடத்திய தாக்குதல்களில் ஏழு பேர் பலியானதுடன் 34 பேர் காயமடைந்தனர் என்று உள்ளூர் வழக்கறிஞர் ஒருவர் பதிவு ஒன்றில் தெரிவித்துள்ளார்.
ஏப்ரல் 3 ஆம் தேதி உள்ளூர் நேரப்படி மாலை 6:00 மணியளவில், கார்கிவின் ஸ்லோபோடா மாவட்டங்களில் உள்ள குடியிருப்பு கட்டிடங்கள் மீது ரஷிய படையெடுப்பாளர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் , சுமார் பத்து வீடுகள் மற்றும் ஒரு டிராலிபஸ் டிப்போ சேதமடைந்தது.
முதற்கட்ட தகவல்களின்படி, ஏழு பேர் பலியானதுடன் , 34 மூன்று குழந்தைகள் உட்பட காயமடைந்ததாக கார்கிவின் பிராந்திய வழக்கறிஞர் அலுவலகம் டெலிகிராமில் தெரிவித்தது.
புச்சா மற்றும் பிற நகரங்களில் நூற்றுக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டடதாகவும் வெளிநாட்டு தகவல்கள் கூறுகின்றன. அதேவேளை புச்சாவில் தனது படைகள் பொதுமக்களைக் கொன்றதாகக் கூறப்படும் குற்றச்சாட்டை ரஷியா மறுத்துள்ளது.
இந்நிலையில் ரஷியாவிற்கு எதிராக ஒரு புதிய பொருளாதார தடைகள் இருக்கும், ஆனால் அது போதாது என்று உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி(Volodymyr Zelenskyy) தெரிவித்துள்ளார்.
அத்துடன் உக்ரைனில் உள்ள குற்றங்களில் குற்றவாளிகள் ஒவ்வொரு ஆக்கிரமிப்பாளரையும் சட்டப்பூர்வ பொறுப்புக்கு கொண்டு வருவதற்காக உக்ரைனில் ஒரு சிறப்பு சட்ட பொறிமுறையை அமைத்துள்ளதாகவும் ஜெலென்ஸ்கி (Volodymyr Zelenskyy) கூறினார்.
நம்மை தற்காத்துக் கொள்ள உலக வல்லரசுகளிடம் ஆயுதங்களைக் கேட்க வேண்டிய அவசியமில்லை, என்றும் புச்சாவில் நடைபெற்ற கொலைகள், சித்திரவதைகளுக்கு ரஷிய தலைமை தான் பொறுப்பு எனவும் ஜெலென்ஸ்கி (Volodymyr Zelenskyy) தெரிவித்தார்.