ரத்தக்களரியான பிறந்தநாள் விழா: வெளிவரும் அதிர்ச்சி தகவல்கள்
ரொறன்ரோவின் மேற்கு முனையில் பிறந்தநாள் விழா ஒன்றில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் மூன்று பிள்ளைகளும் 2 பெரியவர்களும் காயங்களுடன் தப்பியுள்ளனர்.
கொரோனா கட்டுப்பாடுகள் அமுலில் இருப்பதால், குடியிருப்புக்கு வெளியே முன்னெடுக்கப்பட்ட இந்த விழாவில் இவ்வாறான தாக்குதல் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது.
பொறுக்க முடியாத மிக கொடூரமான சம்பவம் இது எனவும், பொலிஸ் தரப்பு சுட்டிக்காட்டியுள்ளது. டான்ட்ரிட்ஜ் கிரசென்ட் பகுதியில் இரவு 8 மணியளவில் ஒரு குடியிருப்பு வளாகத்தில் இருந்து அவசர உதவிக் குழுவினருக்கு தகவல் சென்றுள்ளது.
தகவலையடுத்து சம்பவயிடத்திற்கு விரைந்த அவசர மருத்துவ உதவிக்குழுவினர், ஒரு வயதான ஒரு ஆண் குழந்தை, 5 வயதான பெண் குழந்தை, 11 வயது சிறுவன் மற்றும் 24 வயது இளைஞர் ஆகியோரை துப்பாக்கி குண்டு காயங்களுடன் மீட்டுள்ளனர்.
தொடர்ந்து பொலிசாரின் உதவியுடன், அந்த நால்வரையும் அருகாமையில் உள்ள மருத்துவமனையில் சேர்ப்பித்துள்லனர். இதில் பிஞ்சு குழந்தை ஆபத்தான கட்டத்தில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
எஞ்சியவர்கள் படுகாயமடைந்துள்ளனர் என்றாலும் உயிருக்கு ஆபத்தில்லை என கூறப்படுகிறது. பிறந்தநாள் விழாவானது ஒரு வயது குழந்தைக்கானது எனவும், ஆனால் தற்போது உயிருக்கு ஆபத்தான நிலையில் இருக்கும் குழந்தையின் பிறந்தநாளா அது என்பது உறுதிப்படுத்தப்படவில்லை என பொலிசார் தெரிவிக்கின்றனர்.
முதற்கட்ட விசாரணைக்கு பின்னரே, இது திட்டமிட்ட தாக்குதலா, அல்லது வெறுப்புணர்வு காரணமாக முன்னெடுக்கப்பட்டதா என்பது தெரியவரும் என பொலிசார் கூறுகின்றனர்.
இந்த தாக்குதல் தொடர்பில் ஆய்வு செய்த பொலிசார், தாக்குதலில் ஒருவருக்கு மேற்பட்டவர்கள் ஈடுபட்டிருக்கலாம் என்றே சந்தேகம் தெரிவித்துள்ளனர்.