எந்த நாட்டில் பொது இடங்களில் புகைத்தால் வழக்கு தெரியுமா?
பிரான்சில் கடற்கரைகள், பூங்காக்கள் மற்றும் பிற பொது இடங்களில் புகைபிடிப்பது இன்று ஞாயிற்றுக்கிழமை முதல் அமலுக்கு வரும் வகையில் தடை செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பொது இடங்களில் புகைபிடிப்பால் குழந்தைகள் பாதிக்கப்படுவதை தடுப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளன.
உத்தியோகபூர்வ புள்ளிவிவரங்களின்படி,
ஆண்டுக்கு 3,000 முதல் 5,000 பேர் வரை உயிரிழக்கப்படுவது இ்ந்த புகைபிடித்தலின் ஆபத்துகளிலிருந்தே ஆகும். குழந்தைகளைப் பாதுகாப்பதே இந்த விதிகளின் நோக்கமாகும்.
சனிக்கிழமையன்று அதிகாரப்பூர்வ அரசாங்க வர்த்தமானியில் வெளியிடப்பட்ட விதிகள், பேருந்து நிறுத்துமிடங்களிலும், நூலகங்கள், நீச்சல் குளங்கள் மற்றும் பள்ளிகளிலிருந்து 10 மீட்டர் (33 அடி) சுற்றளவில் உள்ள இடங்களிலும் புகைபிடிப்பதைத் தடைசெய்கின்றன,
இவை அனைத்தும் குழந்தைகள் அடிக்கடி செல்லும் இடங்கள். இருப்பினும், அண்டை நாடான ஸ்பெயினில் விரைவில் அறிமுகப்படுத்தப்படவுள்ள புதிய விதிகளைப் போலல்லாமல், பார்கள் மற்றும் உணவகங்களின் மொட்டை மாடிகளுக்கு இந்தத் தடை பொருந்தாது.
விதிகளில் மின்-சிகரெட்டுகளும் குறிப்பிடப்படவில்லை. தடையை மீறும் ஒருவருக்கு €135 அபராதம் விதிக்கப்படலாம். இருப்பினும் ஆரம்ப சலுகை காலம் இருக்கும்.
பூங்கா, கடற்கரை, பள்ளி இவை விளையாட, கற்றுக்கொள்ள மற்றும் சுவாசிக்க வேண்டிய இடங்கள். புகைபிடிப்பதற்காக அல்ல என்று சுகாதார மற்றும் குடும்ப அமைச்சர் கேத்தரின் வௌட்ரின் கூறினார்.
புதிய விதிகள் 2032 ஆம் ஆண்டு முதல் பிரான்ஸ் இலக்காகக் கொண்ட புகையிலை இல்லாத தலைமுறையை நோக்கிய மற்றொரு படியை பிரதிநிதித்துவப்படுத்துவதாக அவர் கூறினார்.