கனடாவுக்கு நாடு கடத்தப்பட இருக்கும் சமூக ஊடக பிரபலமான அழகி: பின்னணியில் ஒரு கிரைம் செய்தி
கனேடிய அழகி ஒருவர், கர்ப்பிணிப்பெண் ஒருவரையும் அவரது கணவரையும் சுட்டுவிட்டு காதலனுடன் தலைமறைவான நிலையில், மூன்று மாதங்களுக்குப் பின் சிக்கியுள்ளார். 2020ஆம் ஆண்டு பிப்ரவரி 28 அன்று மாலை, கனடாவின் ஹாமில்டன் நகரில் ஒரு துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் Tyler Pratt (39) என்பவர் கொல்லப்பட்டார்.
கர்ப்பிணியான அவரது காதலியின் வயிற்றில் குண்டு பாய்ந்ததில், அவரது வயிற்றிலிருந்த குழந்தை இறந்துபோனது.
துப்பாக்கிச்சூட்டை நிகழ்த்தியவர்கள் Oliver Karafa (28), மற்றும் அவரது காதலியான Yun 'Lucy' Lu Li (25) என்னும் சமூக ஊடக பிரபலமும், கனேடிய செல்வந்தரான ஒருவரின் மகளும் என பொலிசாருக்கு தெரியவந்தது. ஆனால், பொலிசார் வருவதற்குள் தப்பிய Karafaவும் அவரது காதலியான Lu Liயும் கனடாவிலிருந்து வெளியேறியிருந்தார்கள்.
24 மணி நேரத்துக்குள் பல நாடுகளைக் கடந்து ஹங்கேரி தலைநகரான புதாபெஸ்டை அடைந்திருந்தார்கள் அவர்கள். இந்நிலையில், கடந்த சனிக்கிழமை அவர்கள் இருவரும் ஹங்கேரி பொலிசாரிடம் சிக்கினார்கள். அவர்கள் மீது கொலை மற்றும் கொலை முயற்சிக் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
அவர்கள் இருவரும் சில வாரங்களில் கனடாவுக்கு நாடு கடத்தப்பட இருக்கிறார்கள். இதற்கிடையில், Tylerஐ சுட்டுக் கொன்றது Karafaதான் என பொலிசார் தெரிவித்துள்ளார்கள்.
Lu Li ஒரு செல்வந்தரும், சமூக ஊடக பிரபலமும், கனடாவில் லிபரல் கட்சியுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட குடும்பத்தைச் சேர்ந்தவரும் என தெரியவந்துள்ளது.
ஒரே பிரசவத்தில் பிறந்த மூன்று குழந்தைகளில் ஒருவரான Lu Li, தனது இரண்டு சகோதரிகளுடன், ஒரே மாதிரி குட்டியாக நீச்சல் உடை அணிந்துகொண்டு சமூக ஊடகங்களில் புகைப்படங்கள் வெளியிடுபவர் என்பது குறிப்பிடத்தக்கது.