சிலிண்டர்கள் வெடிப்பு தொடர்பில் பொதுமக்களுக்கு விசேட அறிவுறுத்தல்!
நாட்டில் அண்மைக் காலமாக எரிவாயு வெடிப்புச்சம்பவங்கள் அதிகமாக பதிவாகிவருகின்ற நிலையில், வீடுகளில் ஏற்படும் எரிவாயு வெடிப்பு சம்பவங்களைத் தவிர்க்க வீட்டிலுள்ள மின் கட்டமைப்பைப் பரிசோதிக்குமாறு மக்களிடம் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
இதேவேளை, எரிவாயு விபத்துகள் இடம்பெற்ற எந்த ஓர் இடத்திலும் சிலிண்டர்கள் வெடிக்கவில்லை என்றும் மின்சாரக் கட்டமைப்புகளை பரிசோதனையிட்டு பாதுகாப்பாக உள்ளதா என உறுதி செய்து கொள்ளுமாறும் அரச பகுப்பாய்வு திணைக்களத்தின் சிரேஷ்ட உதவி ஆய்வாளர் ரொஷான் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
மேலும், சிலிண்டரில் இருந்து திரவ பெற்ரோலிய வாயு வெளியேறி காற்றில் கலந்துள்ளமையால், மின்சார சுவிட்சின் மூலம் ஏற்படும் தீப்பொறி பாதிப்பை ஏற்படுத்தி விடக் கூடும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
இதனை அடுத்து, காலையில் எழுந்திருக்கும் போது வீட்டில் சமையல் எரிவாயுவின் மணம் வீசினால் மின்சார விளக்குகளை ஒளிரச் செய்யாமல், கதவு, ஜன்னல்களை திறக்காமல், மணம் குறையும் வரை சமையல் எரிவாயுவைப் பயன்படுத்த வேண்டாம் எனவும் அவர் மக்களுக்கு அரச பகுப்பாய்வு திணைக்களத்தின் சிரேஷ்ட உதவி ஆய்வாளர் ரொஷான் பெர்னாண்டோ ஆலோசனை வழங்கியுள்ளார்.