இலங்கையில் சர்வதேச விமான நிலையங்கள் மூடப்படும் அபாயம்
இலங்கையில் ஏற்பட்டுள்ள எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக விமான சேவைகள் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
சில விமானங்கள் மதுரைக்கு சென்று எரிபொருள் நிரப்பி புறப்பட்டுச் செல்வதாக விமான நிறுவன வட்டாரங்கள் தெரிவித்தன.
விமான நிலையத்தில் ஏற்பட்டுள்ள நெருக்கடி தொடர்பில் கருத்து கேட்ட போது, அது தொடர்பில் விளக்கமளிக்க விமான நிலையம் மற்றும் விமானப் போக்குவரத்து நிறுவனத்தின் தலைவரான ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் ஜி.ஏ. சந்திரசிறி மறுப்பு தெரிவித்துள்ளார்.
இதேவேளை கட்டுநாயக்க விமான நிலையத்தில் எதிர்வரும் 31ஆம் திகதி வரை மட்டுமே விமானங்களுக்கு தேவையான எரிபொருள் இருப்பதாக விமான நிலைய மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இதன் காரணமாக விமான நிலையங்கள் மூடப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, அமைதியின்மை காரணமாக நாடளாவிய ரீதியில் 40க்கும் மேற்பட்ட எரிபொருள் நிரப்பு நிலையங்கள் மூடப்பட்டுள்ளன.