குரங்கு அம்மை தடுப்பூசி செலுத்தும் பணியை ஆரம்பித்த நாடு
இத்தாலியில் குரங்கு அம்மை தடுப்பூசி செலுத்தும் பணி ஆரம்பிக்கப்பட்டுள்ளது. உலகமெங்கும் குரங்கு அம்மை பரவி வருகிற நிலையில், சர்வதேச சுகாதார நெருக்கடி நிலையை உலக சுகாதார அமைப்பு அறிவித்தது.
சில நாடுகள், இந்த தொற்று நோயை தடுக்க தடுப்பூசி போடுவதில் கவனம் செலுத்தத் ஆரம்பித்துள்ளன. அந்த வகையில் குரங்கு அம்மைக்கு எதிராக இத்தாலியில் தடுப்பூசி போடும் பணி நேற்று முன்தினம் ஆரம்பித்தது.
முதல்நாளில் 10 பேருக்கு இந்த தடுப்பூசி செலுத்தப்பட்டது. இதுபற்றி ரோம் நகரின் தொற்று நோய் வைத்தியசாலையான ஸ்பாலன்ஜானி வைத்தியசாலை கூறுகையில் ,
"பெரியம்மை நோய் தடுப்புக்காக உருவாக்கப்பட்ட 2 டோஸ் கொண்ட ஜின்னியோஸ் தடுப்பூசி குரங்கு அம்மைக்கு எதிராகவும், வலுவாகவும் செயல்படுகிறது.
ஏனென்றால், பெரியம்மை வைரசும், குரங்கு அம்மை வைரசும் ஒன்றுக்கொன்று நெருக்கமானவை" என தெரிவித்துள்ளது.