அமெரிக்காவில் பள்ளியில் ஏற்பட்ட துப்பாக்கிச்சூட்டில் மாணவர் ஒருவர் கைது!
அமெரிக்காவில் டெக்ஸாஸ் பகுதியில் பள்ளியில் 19 மாணவர்கள் உள்பட 23 பேர் கொல்லப்பட்ட சம்பவத்தையடுத்து, மீண்டும் அது போன்ற ஒரு சம்பவம் நடைபெறாமல் பொலீசார் தடுத்து நிறுத்தியுள்ளனர் .
ஆயுதங்களுடன் ரிச்சர்ட்சன் உயர் நிலைப் பள்ளிக்கு அருகில் ஒரு மாணவரை பொலீசார் கைது செய்துள்ளனர்.
கையில் துப்பாக்கியுடன் ஒரு மாணவன் பள்ளிக்கு அருகில் நடமாடுவதாக பொலீசாருக்கு தொலைபேசி மூலம் தகவல் கிடைத்தது. உடனடியாக அப்பகுதியில் இருந்த அனைத்துப் பள்ளிகளுக்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
இதையடுத்து வேகமாக செயலில் இறங்கி அந்த மாணவரை பொலீசார் கைது செய்தனர்.
அவர் வாகனத்தில் ஏகே 47 ரக கைத்துப்பாக்கி மற்றும் ரைபிள் துப்பாக்கி ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டு ஆயுதத்தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.