பிரித்தானியாவில் திடீரென ஒரே நாளில் அதிகரித்த உயிரிழப்புகள்!
பிரித்தானியாவில் கொரோனா தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் 26ஆயிரத்து 628பேர் பாதிக்கப்பட்டதோடு 185பேர் உயிரிழந்துள்ளனர்.
கொரோனா தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட ஐந்தாவது நாடாக விளங்கும் பிரித்தானியாவில், இதுவரை மொத்தமாக 7இலட்சத்து 282ஆயிரத்து 810பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும், ஒரு இலட்சத்து 34ஆயிரத்து 446பேர் உயிரிழந்துள்ளனர். தற்போதுவரை வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட 13இலட்சத்து 771பேர் அங்குள்ள வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதில் ஆயிரத்து 55பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது. அத்துடன் இதுவரை வைரஸ் தொற்றிலிருந்து மொத்தமாக, 58இலட்சத்து 47ஆயிரத்து 593பேர் பூரண குணமடைந்துள்ளனர்.