cocacola பாட்டில்களை ஓரம்கட்டிய பிரபலம்; ஒரே நாளில் இத்தனை கோடி இழப்பா!
பிரபல கால்பந்தாட்ட வீரர் கிறிஸ்டியனோ ரெனால்டோவின் (Cristiano Ronaldo) ஒரே ஒரு செயலால், cocacola நிறுவனத்தின் பங்குகள் மதிப்பு ஒரே நாளில் 400 கோடி டாலர் சரிந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
போர்ச்சுக்கல் - ஹங்கேரி இடையிலான போட்டிக்கு முன்னதாக ரெனால்டோ (Cristiano Ronaldo) செய்தியாளர்களை சந்தித்தார். இதன்போது யூரோ கால்பந்து போட்டியில் கோககோலா நிறுவனம் ஸ்பான்சராக இருப்பதால் அதன் 2 பாட்டில்கள் அங்கு வைக்கப்பட்டிருந்தன.
அப்போது மேஜை மீது இருந்த இரண்டு cocacola பாட்டில்களை எடுத்து ஓரமாக வைத்த ரெனால்டோ(Cristiano Ronaldo), அங்கிருந்த தண்ணீர் பாட்டிலை கையில் எடுத்து, எல்லோரும் தண்ணீர் குடியுங்கள் என்பது போல் உயர்த்திக் காட்டினார்.
இந்த காட்சி சமூக வலைதளங்களில் அதிகம் பரவி cocacola நிறுவனத்தின் மீது எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தியது.
இதன் காரணமாக அந்நிறுவன பங்குகள் விலை குறைந்து, அதன் சந்தை மதிப்பு ஒரே நாளில் சுமார் 28 ஆயிரம் கோடி ரூபாய் வரை சரிந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.