கொலம்பியாவில் ஒரு லட்சத்தை நெருங்கும் பலி எண்ணிக்கை
சீனாவில் கண்டறியப்பட்ட கொரோனா தற்போது உலகம் முழுவதும் 210 நாடுகளுக்கு மேல் பரவி மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது. கொரோனா பாதிப்பு அதிகமுள்ள நாடுகளின் பட்டியலில் கொலம்பியா 10வது இடத்தில் உள்ளது.
இந்நிலையில், கொலம்பியாவில் ஒரே நாளில் 27,818 பேருக்கு பாதிப்பு உறுதியான நிலையில் அங்கு தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 39 லட்சத்தைத் தாண்டியுள்ளது.
அத்துடன் ஒரே நாளில் 599 பேர் பலியான நிலையில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 99 ஆயிரத்து 934 ஆக உள்ளது.
கொரோனா தொற்றில் இருந்து 36.67 லட்சத்துக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளதுடன் 1.78 லட்சத்துக்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.