பிரான்ஸிற்கு சுற்றுலா வந்த இளம் பெண்ணுக்கு நேர்ந்த கதி!
பிரான்ஸில் ஈஃபிள் கோபுரத்தின் தோட்டத்தில் வைத்து இரு சுற்றுலாப்பயணிகள் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளனர். அவர்களில் ஒருவர் பாலியல் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 5.30 மணி அளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது. இரவு விருந்து ஒன்றில் கலந்துகொண்ட சகோதரிகள் இருவர், அங்கிருந்து இருவரும் பிரிந்தும்சென்றுள்ளனர்.
அதன்பின்னர் தனது சகோதரியைக் காணவில்லை என தேடியபோது, சகோதரி அருகில் உள்ள தோட்டம் ஒன்றில் கிடப்பதையும், அவரை ஆண் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்வதையும் பார்த்து கூச்சலிட்டுள்ளார்.
நபர் ஒருவர் குறித்த பெண்ணை பாலியல் பலாத்காரம் மேற்கொண்டுள்ளார். உடனடியாக காவல்துறையினர் அழைக்கப்பட்டு அவ்விருவரும் மீட்கப்பட்டனர். பிரேஸில் நாட்டைச் சேர்ந்த குறித்த இரு பெண்களும் பிரெஞ்சு மொழி பேச சிரமப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தாக்குதலாளி தப்பி ஓடியுள்ளார். குறித்த நபர் முன்னதாக விருந்தின் போது சகோதரிகளில் மூத்தவரான பெண்ணிடம் தகாத முறையில் நடந்துகொண்டதாகவும், அதன் பின்னரே இளைய சகோதரியினை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியதாக அப்பெண் குறிப்பிட்டுள்ளார்.