கிழக்கு பல்கலைக்கழகத்துக்குள் அத்துமீறி உள்நுழைந்த பொலிஸார்!
இலங்கை கிழக்கு பல்கலைக்கழகத்துக்குள் பொலிஸ் அத்து மீறல் தொடர்பில் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் கண்டனம் ஒன்றை வெளியிட்டுள்ளது.
இதுத் தொடர்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, கிழக்குப் பல்கலைக்கழக பொங்கு தமிழ்த் தூபி அருகில் அமைதியான முறையில் இன்றைய தினம் (27.11.2023) இறந்த உறவுகளை நினைவு கூருவதற்கு கட்டப்பட்டிருந்த சிவப்பு மஞ்சள் கொடிகளை ஶ்ரீ லங்கா பொலிஸ் அறுத்துச் சென்றதுடன் பல்கலைக் கழகத்தினுள் அத்து மீறி மாணவர்களை பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்வோம் என்று மிரட்டினார்கள்.
பின் கால் பாதனிகளுடன் நாம் புனிதமாக வழிபடும் இடத்தில் மிதித்து நினைவுச்சின்னம் ஒன்றை கழற்றிச் சென்றார்கள்.
இவ்வாறான காட்டுமிராண்டித்தனமான செயற்பாட்டினை மீறி கிழக்குப் பல்கலைக்கழக மாணவர்களால் உயிர் தியாகம் செய்த உறவுகளை நினைவு கூறும் முகமாக தீபங்கள் ஏற்றி, ஆகாய தீ பந்தம் என்பன ஒளி அனுப்பப் பட்டு மாவீரர் நினைவு தினம் அனுஷ்டிக்கப்பட்டது.
மாணவர்கள் மீதான அச்சுறுத்தல்களுக்கு எதிராக இவ் பல்கலை மாணவர்கள் ஒன்றியம் வன்மையான கண்டனங்களை தெரிவிப்பதுடன் இது போன்ற அச்சுறுத்தல் நிகழாத வண்ணம் எம்மை பாதுகாக்க நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறோம் என கேட்டுக்கொண்டுள்ளார்கள்.