ரொறன்ரோ பள்ளி வளாகங்களில் சிறுவர்கள் மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகங்களினால் பதற்றம்
ரொறன்ரோ உயர்நிலைப் பாடசாலைகளில் ஆயுத வன்முறைகளில் ஈடுபட்ட மூன்று சிறுவர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இந்த சம்பவங்களும் ஒரு மணித்தியால இடைவெளியில் வெவ்வேறு இடங்களில் இடம்பெற்றுள்ளன.
பெல்லட் துப்பாக்கி எனப்படும் துப்பாக்கிகளைப் பயன்படுத்தி சிறுவர்கள் தாக்குதல் நடாத்தியுள்ளனர்.
டுன்டாஸ் வீதியில் அமைந்துள்ள தோமஸ் மெட்ரன் கத்தோலிக்க உயர்நிலைப் பாடசாலையில் துப்பாக்கிச் சூட்டு சம்பவமொன்று பதிவாகியுள்ளது.
பாடசாலை வளாகத்திற்குள் 17 வயதான சிறுமி ஒருவர் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி காயமடைந்துள்ளார்.
குறித்த சிறுமி உடனடியாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாகவும், உயிர் ஆபத்து கிடையாது எனவும் வைத்தியசாலை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த சம்பவத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டின் பேரில் 15 வயதான சிறுவன் ஒருவனை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
சில மணித்தியாலங்கள் இடைவெளியில் லோரன்ஸ் அவன்யூ பகுதியில் அமைந்துள்ள வெஸ்டன் கொலிகேட் உயர்நிலைப் பாடசாலையில் 15 வயது சிறுவன் ஒருவன் காயமடைந்துள்ளான்.
இந்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் 15 மற்றும் 17 வயதான சிறுவர்கள் இருவரை கைது செய்துள்ளதுடன் அவர்களிடமிருந்து இரண்டு பெல்லட் துப்பாக்கிகளும் மீட்கப்பட்டுள்ளன.
இந்த இரண்டு சம்பவங்கள் தொடர்பிலும் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.