சிறுமியை கடத்தி பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய குற்றச்சாட்டில் மூவர் கைது
கனடாவில் 17 வயதான சிறுமி ஒருவரை கடத்தி பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய குற்றச்சாட்டின் பேரில் மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
17 வயதான சிறுமி கடத்தப்பட்ட விவகாரம் தொடர்பில் கடந்த ஆறு மாதங்களாக விசாரணை நடாத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
கடந்த 2021ம் ஆண்டு ஒக்ரோபர் மாதம் 25ம் திகதி இந்த சம்பவம் இடம்பெற்றிருந்தது.
றொரன்டோவின் ஹோட்டல்களுக்கு சிறுமி அழைத்துச் செல்லப்பட்டு பாலியல் தொழிலில் ஈடுபட்டதாகவும், இவ்வாறு கடத்தப்பட்டு துன்புறுத்தப்பட்ட காலத்தில் சிறுமி 18 வயதை அடைந்துவிட்டார் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
சிறுமி பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்பட்டமை மட்டுமன்றி போதைப் பொருள் வர்த்தகத்திலும் ஈடுபடுத்தப்பட்டார் என தெரிவிக்கப்படுகின்றது.
இந்த சம்பவத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டின் பேரில் 30 வயதான யோநாதன் எனப்படும் யோகி, 28 வயதான காலித் மொஹமட் மற்றும் 32 வயதான அப்லியாஸீஸ் மொஹமட் ஆகியோர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த அனைவரும் றொரன்டோ பிரஜைகள் என்பது குறிப்பிடத்தக்கது.