கனடா புயலில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 8 ஆக உயர்வு
கனடா புயலில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை எட்டாக உயர்வடைந்துள்ளது.
ஒன்றாரியோ மற்றும் கியூபெக் மாகாணங்களில் இவ்வாறு புயல் தாக்குதலினால் உயிரிழப்புக்களும், உயிர்ச் சேதங்களும் பதிவாகியுள்ளன.
புயல் தாக்குதல் காரணமாக பல்லாயிரக் கணக்காணவர்கள் மின்சார வசதியின்றி பாதிக்கப்பட்டுள்ளனர்.
புயல் காற்றுத் தாக்கத்தினால் மரங்கள் முறிந்து வீழ்ந்துள்ளதாகவும் அவற்றை அகற்றும் பணிகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
பாதைகளில் மரங்களை அகற்றுதல் உள்ளிட்ட பணிகளை முன்னெடுப்பதற்கு குறைந்தபட்சம் நான்கு நாட்கள் தேவைப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஒரே நாளில் பாதைகளை வழமை நிலைக்கு கொண்டு வருவது நடைமுறைச் சாத்தியமற்றது என ஒட்டாவா மேயர் ஜிம் வெட்சன் தெரிவித்துள்ளார்.
ஒன்றாரியோ மாகாணத்தில் புயல் தாக்கம் காரணமாக ஏழு பேர் கொல்லப்பட்டதுடன், கியூபெக் மாகாணத்தில் பெண் ஒருவரும் இதுவரையில் உயிரிழந்துள்ளனர்.
புயல் காற்று காரணமாக ஏற்பட்ட சேத விபரங்கள் இன்னமும் மதிப்பீடு செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.