ரொறன்ரோ பதிவு செய்த புதிய சாதனை
ரொறன்ரோவில் தடுப்பூசி பெற தகுதியானவர்களில் 25% மக்கள் முழுமையாக தடுப்பூசி பெற்றுக்கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
குறித்த புதிய சாதனையை சனிக்கிழமை ரொறன்ரோ நகரம் பதிவு செய்துள்ளது. அதாவது தடுப்பூசி பெற தகுதியான பெரியவர்களில் நான்கில் ஒருவர் தற்போது முழுமையாக தடுப்பூசி பெற்றுக்கொண்டுள்ளனர்.
மேலும் நகரில் 75% மக்கள் ஒரு டோஸ் தடுப்பூசி பெற்றுக்கொண்டுள்ளனர். இந்த புதிய சாதனையை நகர மேயர் John Tory வெகுவாக பாராட்டியுள்ளார்.
கடந்த டிசம்பர் மாத மத்தியில் இருந்தே ரொறன்ரோவில் தடுப்பூசி அளிக்கப்பட்டு வருகிறது. இதுவரை மொத்தம் 2.9 மில்லியன் டோஸ்களுக்கு மேலாக பொதுமக்களுக்கு அளிக்கப்பட்டுள்ளது.
வெள்ளிக்கிழமை மாலை நேரம் வரையில் சுமார் 808,800 பேர்கள் கொரோனா தடுப்பூசிக்காக பதிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
25% மக்கள் முழுமையாக தடுப்பூசி பெற்றிருந்தாலும், நகரம் இன்னும் ஆபத்து கட்டத்தில் இருந்து வெளிவரவில்லை எனவும், அச்சுறுத்தும் டெல்டா மாறுபாடு பிராந்தியம் முழுமையும் பரவி வருவதாக John Tory சுட்டிக்காட்டியுள்ளார்.
ரொறன்ரோவை பொறுத்தமட்டில் அடுத்த இரண்டு வாரங்களில் மேலும் 90,000 டோஸ் தடுப்பூசிகள் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு அனுமதிக்கப்பட உள்ளது.
நேற்று ஒரு நாளில் மட்டும் 30,000 மாடர்னா தடுப்பூசிகள் நகரின் சுகாதார மையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. திங்கட்கிழமை மேலதிகமாக 60,000 மாடர்னா தடுப்பூசிகள் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு அனுமதிக்கப்பட உள்ளது.
குடியிருப்பாளர்கள் பிராந்திய அரசின் இணைய பக்கம்மூலம் தடுப்பூசிகளுக்கு பதிவு செய்து கொள்ளலாம்.