அவுஸ்திரேலியாவில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த தமிழருக்கு நேர்ந்த சோகம்!
அவுஸ்திரேலியா நெடுஞ்சாலையில் இடம்பெற்ற விபத்தில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த தமிழர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இச்சம்பவம் கடந்த வெள்ளிக்கிழமை, மெல்பேர்னிலிருந்து 142 கிலோ மீற்றர் தொலைவில் - பிராந்தியத்தில் அமைந்துள்ள - Toolleen என்ற இடத்தில் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகின்றது.’
மேலும் இவ்விபத்து சம்பவத்தில் யாழ்ப்பாணம் கந்தர்மடத்தை பூர்வீகமாக கொண்ட தமிழர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இவ்விபத்து குறித்து தெரியவருவதாவது, வாகனமொன்று படகினை கட்டியிழுத்துக் கொண்டு வடக்கு நெடுஞ்சாலை பகுதியை நோக்கி சென்று கொண்டிருந்த போது, வீடொன்றிலிருந்து வெளியே வந்த காருடன் மோதி விபத்துகுள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் குறித்த விபத்தில் 68 வயதான மாணிக்கம் இரட்ணவடிவேல் என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், அவரது மனைவி படுகாயங்களுடன் மெல்பேர்ன் Alfred வைத்தியசாலைக்கு ஹெலிக்கொப்டர் மூலம் கொண்டு செல்லப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குறித்த விபத்தில் மற்றைய வாகனத்திலிருந்த பயணியொருவர் காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
இவ்விபத்து குறித்து மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.