அமெரிக்க பாடசாலையில் இடம்பெற்ற துயர சம்பவம்; உக்ரைன் அதிபர் இரங்கல்
அமெரிக்காவின் டெக்சாஸ் துப்பாக்கிச்சூட்டில் கொல்லப்பட்ட குழந்தைகளின் குடும்பங்களுக்கு உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி (Volodymyr Zelenskyy) இரங்கல் தெரிவித்துள்ளார்.
சுவிட்சர்லாந்தில் உள்ள இராஜதந்திரிகளிடம் வீடியோ லிங்க் மூலம் உரையாற்றிய உக்ரைன் தலைவர் (Volodymyr Zelenskyy) இந்த சம்பவம் பெரும் பயங்கரமானது என கூறினார்.
“டெக்சாஸில் அப்பாவி குழந்தைகள் கொல்லப்பட்ட செய்தியால் ஆழ்ந்த வருத்தம் தெரிவித்த உக்ரைன் அதிபர், இந்த துயரச் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கும், அமெரிக்க மக்கள் மற்றும் POTUS மக்களுக்கும் ஆழ்ந்த இரங்கல்களையும் (Volodymyr Zelenskyy) கூறினார்.
அத்துடன் உக்ரைன் மக்கள் பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்கள், நண்பர்கள் மற்றும் அனைத்து அமெரிக்கர்களின் வலியைப் பகிர்ந்து கொள்கிறார்கள். எனது இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறேன் என்றும் அவர் (Volodymyr Zelenskyy) தெரிவித்தார்.
ராப் எலிமெண்டரி பள்ளியில் நடந்த துப்பாக்கிச் சூடு, அமெரிக்காவில் ஏறக்குறைய ஒரு தசாப்த காலமாக நடந்த மிக மோசமான பள்ளிப் படுகொலை என கூறப்படும் நிலையில், இந்த 19 குழந்தைகள் மற்றும் 2 ஆசிரியர்கள் உட்பட 21 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
அமெரிக்காவை உலுக்கிய சம்பவம்; உயிரிழந்த ஆசிரியை தொடர்பில் வெளியான தகவல்