இட்டோபிகோக்கில் தெய்வாதீனமாக ரயில் விபத்திலிருந்து தப்பிய இளைஞர்கள் (Video)
இட்டோபிகோக்கில் தெய்வாதினமாக ரயில் விபத்திலிருந்து மூன்று இளைஞர்கள் தப்பிப் பிழைத்துள்ளனர்.
GO ரயில் பயணித்துக் கொண்டிருந்த போது ரயில் பாதையில் கவனயீனமாக நடந்து சென்ற மூன்று இளைஞர்களே விபத்தில் சிக்கவிருந்தனர்.
ரயில் பாதைகளில் நடப்பது ஆபத்தானது என ஏற்கனவே பல்வேறு எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ள நிலையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பிலான காணொளியொன்று டுவிட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
மூன்று இளைஞர்கள் ரயில் பாதையில் நடந்து சென்றனர் எனவும் அதில் இரண்டு இளைஞர்கள் ஓடும் ரயிலின் எதிரில் ஓடிச் சென்றனர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
ரயிலில் மோதுவதற்கு சில நொடிகளில் இருவரும் பாதையை விட்டு விலகி தப்பித்துக் கொண்டுள்ளனர்.
ரயில் பாதையில் நடப்பது ஆபத்தானது என பல்வேறு தடவைகள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்த விபத்தில் எவருக்கும் காயங்கள் ஏற்படவில்லை என்ற போதிலும் கனடாவில் வருடாந்தம் ரயில் பாதையில் நடப்பதனால் ஏற்படக்கூடிய விபத்துக்களில் 100 பேர் வரையில் காயமடைகின்றனர் என தெரிவிக்கப்படுகின்றது.