டுவிட்டரில் ஆபாச படங்களை பதிவிட்ட நபருக்கு நீதிமன்றம் வழங்கிய தண்டனை
டுவிட்டரில் ஆபாச படங்களை பதிவேற்றம் செய்த கனடாவின் மானிடோபாவைச் சேர்ந்த நபர் ஒருவருக்கு நீதிமன்றம் தண்டனை விதித்துள்ளது.
குறித்த நபருக்கு நீதிமன்றம் ஒன்பது மாத கால சிறைத்தண்டனை விதித்துள்ளது. தனது முன்னாள் காதலியுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களை குறித்த நபர் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
சிறைத்தண்டனையை வீட்டிலேயே அனுபவிக்க அனுமதிக்குமாறு குறித்த நபர் நீதிமன்றில் விடுத்த கோரிக்கையை நீதிபதி ரொபர்ட் ஹென்ரிச் நிராகரித்துள்ளார்.
முன்னாள் காதலியை பழிவாங்கும் நோக்கில் வேண்டுமென்றே ஆபாச புகைப்படங்களை குறித்த நபர் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார் என குற்றம் சுமத்தி வழக்குத் தொடரப்பட்டிருந்தது.
டுவிட்டரில் புகைப்படங்களை பதிவிட்டு ஐந்து மணித்தியால இடைவெளியில் குறித்த நபரை பொலிஸார் கைது செய்துள்ளதுடன், புகைப்படங்களை அழிக்குமாறும் கோரியுள்ளனர்.
இந்த சிறைத்தண்டனைக்கு மேலதிகமாக இரண்டாண்டு காலம் குறித்த நபரின் நடவடிக்கைகள் கண்காணிக்கப்படும் என நீதிமன்றம் அறிவித்துள்ளது.