உடனே அழியுங்கள் - உக்ரைனுக்கு உலக சுகாதார அமைப்பு விடுத்த அறிவுரை
ஆய்வகங்களில் ஆபத்தான நேய்க்கிருமிகள் ஏதேனும் இருந்தால், அதனை உடனடியாக அழித்துவிடுமாறு உக்ரைன் நாட்டிற்கு உலக சுகாதார நிறுவனம் (World Health Organization) கூறியுள்ளது.
உக்ரைன் - ரஷ்யா இடையிலான போர் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. ரஷ்ய துருப்புகள் முக்கிய நகரங்களில் ஏவுகணை, வான்தாக்குதல், பீரங்கி தாக்குதல் நடத்தி வருகிறது.
இந்நிலையில், உக்ரைனில் உள்ள ஆய்வகங்களில் ஆபத்தான நேய்க்கிருமிகள் ஏதேனும் இருந்தால், அதனை உடனடியாக அழித்துவிடுமாறு உக்ரைனிடம் உலக சுகாதார நிறுவனம் கூறியுள்ளது.
ரஷ்யா நடத்திவரும் தாக்குதல்களால், உக்ரைனில் உள்ள ஆய்வகங்களில் ஆபத்தான நோய்க்கிருமிகள் கசிய வாய்ப்பு உள்ளது. இந்த நோய்க்கிருமிகள் பொதுமக்களை தாக்கவும் வாய்ப்புள்ளது.
இதனை கருத்தில் கொண்டு, நோய்க்கிருமிகளை தடுக்கும் விதமாக, ஆபத்தான நேய்க்கிருமிகளை உடனடியாக அழிக்கும் படி உக்ரைனுக்கு உலக சுகாதார அமைப்பு அறிவுரை கூறியுள்ளது.