இலங்கை மக்களுக்கு உதவ ஐக்கிய நாடுகள் புதிய நடவடிக்கை!
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவும் வகையில் ஐக்கிய நாடுகள் புதிய நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது.
இந்த நிலையில், இலங்கைக்கு உதவும் நோக்கில் நன்கொடைத் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக, ஐ.நா வதிவிடப் பிரதிநிதி ஹனா சிங்கர் (Hanaa Singer) ஹம்டி தெரிவித்துள்ளார்.
Sri Lanka's gains in healthcare, education and poverty alleviation are being threatened by the current crisis.
— Hanaa Singer-Hamdy (@SingerHanaa) September 19, 2022
#SriLanka ?? needs her friends to show solidarity to address shortages in #food and #medical supplies.
Donate: https://t.co/6FeO9hI64X pic.twitter.com/4JcqivEZlC
இந்த தகவலை தனது டுவிட்டர் பக்கத்தில் இன்றைய தினம் (19-09-2022) வெளியிட்டுள்ளார்.
சுகாதாரம், கல்வி மற்றும் வறுமை ஒழிப்பு ஆகியவற்றில், இலங்கையின் வெற்றிகள், தற்போதைய நெருக்கடியால் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளதென அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், உணவு பாதுகாப்பை உறுதி செய்வதற்கும், மருத்துவப் பொருட்களில் நிலவும் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்கும், இலங்கைக்கு, அதன் நண்பர்கள் ஒற்றுமையை வெளிப்படுத்த வேண்டும் ஹனா சிங்கர் அழைப்பு விடுத்துள்ளார்.