டெக்சாஸ் துப்பாக்கிச்சூடு: ஆர்ப்பாட்டத்தில் இறங்கிய பாடசாலை மாணவர்கள்!
அமெரிக்காவில் துப்பாக்கி கலாச்சாரத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பாடசாலை மாணவர்கள் இன்றைய தினம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அமெரிக்காவின் விர்ஜினியா மற்றும் மிச்சிகன் மாகாணங்களில் உள்ள பாடசாலை மாணவர்கள் டெக்சாஸ் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த குழந்தைகளுக்கு ஆதரவாக வகுப்புகளைப் புறக்கணித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள பாடசாலைக்குள் புகுந்து இளைஞர் ஒருவர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 19 குழந்தைகள் உட்பட 21 பேர் பலியான நிலையில், உயிரிழந்தவர்களுக்கு நீதி வேண்டியும், துப்பாக்கிக் கட்டுப்பாட்டு சட்டங்களைக் கடுமையாக்கக் கோரியும் பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டங்கள் வெடித்துள்ளன.
அந்த வகையில் மிச்சிகன் மற்றும் விர்ஜினியா மாகாணங்களிலும் பாடசாலை மாணவர்கள் துப்பாக்கிக் கலாச்சாரத்திற்கு எதிராகக் களம் இறங்கினர்.