அமெரிக்க–இஸ்ரேல் தாக்குதல் எதிரொலி ; ஸ்பெயின் கடும் கட்டுப்பாடு
ஈரானுக்கு எதிரான அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் தாக்குதல்களைத் தொடர்ந்து, ஸ்பெயினில் உள்ள அமெரிக்கத் தளங்களைப் பயன்படுத்த அந்நாட்டு அரசாங்கம் தடை விதித்துள்ளது.
FlightRadar24 தரவுகளின்படி, ஸ்பெயினின் தெற்குப் பகுதியில் உள்ள ரோட்டா மற்றும் மொரோன் இராணுவத் தளங்களில் இருந்து 15 அமெரிக்க விமானங்கள் வெளியேறியுள்ளன.

இதில் குறைந்தது 7 விமானங்கள் ஜெர்மனியில் உள்ள ராம்ஸ்டீன் தளத்தில் தரையிறங்கியுள்ளன. ஸ்பெயின் வெளியுறவு அமைச்சர் ஜோஸ் மானுவல் அல்பாரெஸ் கூறுகையில், அமெரிக்காவுடன் இணைந்து இயக்கப்பட்டாலும், இந்தத் தளங்கள் ஸ்பெயினின் இறையாண்மைக்கு உட்பட்டவை.
ஐக்கிய நாடுகள் சபையின் சாசனத்திற்கு முரணான அல்லது ஒப்பந்தத்தில் இல்லாத எதற்கும் இந்தத் தளங்களைப் பயன்படுத்த அனுமதிக்க மாட்டோம் எனத் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
பிரித்தானியாவும் ஆரம்பத்தில் தனது தளங்களைப் பயன்படுத்த அனுமதி மறுத்திருந்தது. இருப்பினும், பிரதமர் கியர் ஸ்டார்மர் கூட்டுத் தற்காப்புக்காக அவற்றைப் பயன்படுத்த அனுமதி வழங்கினார்.

ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சான்செஸ் அமெரிக்க - இஸ்ரேலிய நடவடிக்கைகளைக் கடுமையாகக் கண்டித்துள்ளார். இது வொஷிங்டனுடனான ஸ்பெயினின் உறவில் விரிசலை ஏற்படுத்த வாய்ப்புள்ளதாகக் கருதப்படுகிறது.
விபத்துக்குள்ளான அல்லது வெளியேறிய விமானங்கள் பெரும்பாலும் வான்வழியில் எரிபொருள் நிரப்பும் Boeing KC-135 "Stratotanker" ரகத்தைச் சேர்ந்தவை என்று பாதுகாப்பு அமைச்சர் மெர்கரிட்டா ரோபில்ஸ் குறிப்பிட்டுள்ளார்.