செவ்வாய் கிரகத்தில் இத்தனை பில்லியன் ஆண்டுகள் வரை தண்ணீர் இருந்ததா?....வெளியான தகவல்
செவ்வாய் கிரகத்தில் சுமார் 2 பில்லியன் ஆண்டுகள் வரையில் தண்ணீர் இருந்ததாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
செவ்வாய் கிரகத்தில் இருந்த தண்ணீர் சுமார் 3 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு ஆவியாகிவிட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நாசாவின் மார்ஸ் ரீகனைசென்ஸ் ஆர்பிட்டரிலிருந்து வந்த தகவலின்படி சுமார் 2 முதல் 2.5 பில்லியன் ஆண்டுகள் வரையில் தண்ணீர் இருந்தமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மேலும் செவ்வாயின் பள்ளத்தாக்குகளில் பாய்ந்த தண்ணீர் முழுவதும் ஆவியாகி விட்டதால் குளோரைடு உப்பு படிமங்களாக மாறியுள்ளதையும் நாசா கண்டுபிடித்துள்ளது.