கடன்தொல்லையால் யாழில் 22 வயது இளைஞன் உயிர்மாய்ப்பு
யாழில் தூக்கில் தொங்கிய நிலையில் 22 வயதுடைய இளைஞர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
பட்டினசபை வீதி, சங்கானை என்ற முகவரியைச் சேர்ந்த தியாகராஜா கிந்துஜன் என்ற இளைஞரே இவ்வாறு உயிர்மாய்த்துள்ளார்.
வீட்டில் யாரும் இல்லாதபோது குறித்த இளைஞன் சுருக்கிட்டு தூக்கில் தொங்கி உயிர்மாய்த்துள்ளார்.

பின்னர் அவரது சடலம் மீட்கப்பட்டு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டது.
அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார்.
உடற்கூற்று பரிசோதனைகளுக்காக சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
குறித்த இளைஞர் கடந்த சில நாள்களான கடன்தொல்லையால் பாதிக்கப்பட்டு வந்ததாக உறவுகள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.