பிரான்சில் போக்குவரத்து சோதனையில் 691 வெளிநாட்டவர் கைது

France X
By Sahana Jun 24, 2025 11:17 PM GMT
Sahana

Sahana

Report

பிரான்சின் உள்துறை அமைச்சர் புருனோ ரெட்டையோ (Bruno Retailleau) உத்தரவின் பேரில், கடந்த வாரம் நாடு தழுவிய அளவில் போக்குவரத்து முனையங்களில் நடத்தப்பட்ட தீவிர சோதனையின் போது, சட்டவிரோத நிலையில் இருந்த 691 வெளிநாட்டவர்கள் கைது செய்யப்பட்டதாக இன்ஃபோமைக்ரான்ட்ஸ் (InfoMigrants) செய்தி நிறுவனத்திற்கு உள்துறை அமைச்சகம் தகவல் அளித்துள்ளது.

இருப்பினும், கைது செய்யப்பட்டவர்களில் சுமார் 100 பேர் மட்டுமே உடனடியாக எல்லைக்குத் திருப்பியனுப்பப்பட்டனர் அல்லது நாடு கடத்தும் நோக்கில் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டனர்.

பிரான்சில் போக்குவரத்து சோதனையில் 691 வெளிநாட்டவர் கைது | 691 Foreigners Arrested Traffic Checks In France

மீதமுள்ள 500-க்கும் மேற்பட்டோர் பல்வேறு காரணங்களுக்காக விடுவிக்கப்பட்டுள்ளனர்.

இந்த நடவடிக்கைக்கு மனித உரிமை சங்கங்கள் மற்றும் தொழிற்சங்கங்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.

தீவிர சோதனை நடவடிக்கை ஜூன் 18 மற்றும் 19 ஆகிய திகதிகளில், 48 மணி நேரம் நீடித்த இந்த நடவடிக்கையில், "சட்டவிரோத குடியேறிகளைக் கைது செய்வதற்காக" 4,000-க்கும் மேற்பட்ட , காவல்துறையினர், ஈடுபடுத்தப்பட்டதாக அமைச்சர் புருனோ ரெட்டையோ தெரிவித்திருந்தார்.

பிரான்சின் முக்கிய தொடருந்து நிலையங்கள், அண்டை நாடுகளுக்குச் செல்லும் தொடருந்துகள் மற்றும் எல்லைப் பகுதிகளில் உள்ள பிராந்திய தொடருந்துகள் ஆகியவற்றில் சோதனைகள் தீவிரப்படுத்தப்பட்டன.

பிரான்சில் போக்குவரத்து சோதனையில் 691 வெளிநாட்டவர் கைது | 691 Foreigners Arrested Traffic Checks In France

இந்த இரண்டு நாட்களில் மட்டும், மொத்தம் 844 தொடருந்து நிலையங்கள் மற்றும் 1,273 தொடருந்துகள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டதாக உள்துறை அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது.

கைது மற்றும் அதன் முடிவுகள் கைது செய்யப்பட்ட 691 நபர்களின் நிலைகுறித்த விவரங்கள், இந்த நடவடிக்கையின் உண்மையான தாக்கத்தை வெளிப்படுத்துகின்றன.

எல்லைக்குத் திருப்பியனுப்பப்பட்டவர்கள் சுமார் 100 பேர். இவர்கள் பெரும்பாலும் இத்தாலி மற்றும் ஸ்பெயின் எல்லைப் பகுதிகளில் கைது செய்யப்பட்டு, இருதரப்பு ஒப்பந்தங்களின் கீழ் உடனடியாக அந்த நாடுகளுக்குத் திருப்பி அனுப்பப்பட்டனர்.

பிரான்சில் போக்குவரத்து சோதனையில் 691 வெளிநாட்டவர் கைது | 691 Foreigners Arrested Traffic Checks In France

(இந்த உடனடித் திருப்பி அனுப்பும் நடைமுறை, பிரான்சின் அரசமைப்பு கவுன்சிலால் (Conseil d'État) பிப்ரவரி 2024 இல் சட்டவிரோதமானது எனத் தீர்ப்பளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது).

நிர்வாகத் தடுப்புக் காவலில் (CRA) வைக்கப்பட்டவர்கள், சுமார் 30 பேர். இவர்கள் நாடு கடத்தப்படும் வரை தடுப்பு மையங்களில் வைக்கப்படுவார்கள்.

நாடு கடத்தல் உத்தரவு (OQTF) பெற்றவர்கள், சுமார் 200 பேர். இவர்களுக்கு "பிரெஞ்சு மண்ணை விட்டு வெளியேற வேண்டும் என்ற உத்தரவு" (OQTF) வழங்கப்பட்டுள்ளது.

இவர்கள் 30 நாட்களுக்குள் தன்னிச்சையாக நாட்டை விட்டு வெளியேற வேண்டும். மேற்கண்டவர்களைத் தவிர, மீதமுள்ள 500-க்கும் மேற்பட்டோர் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

பிரான்சில் போக்குவரத்து சோதனையில் 691 வெளிநாட்டவர் கைது | 691 Foreigners Arrested Traffic Checks In France

அவர்களில் சிலருக்கு வீட்டுக் காவலில் இருக்க உத்தரவிடப்பட்டுள்ளது. "வெளிநாட்டவர் விரோத நடவடிக்கை" எனக் கடும் கண்டனம் பல்வேறு தொழிற்சங்கங்கள் மற்றும் இனவெறிக்கு எதிரான MRAP இயக்கம் ஆகியவை இந்த நடவடிக்கையை "மிகவும் நலிவடைந்த நிலையில் உள்ளவர்களைப் பலிகடாவாக்கும் ஒரு வெளிநாட்டவர் விரோத நடவடிக்கை" என்று கடுமையாகச் சாடியுள்ளன.

இந்தச் சோதனைகள், மக்களை அச்சுறுத்தும் "திடீர் கைது நடவடிக்கைகளை (rafles)" ஒத்திருப்பதாகக் கூறிய அவர்கள், "வேலைக்குச் செல்லும் தொழிலாளர்கள், வழக்கத்தைவிட அதிக அச்சத்துடன் பயணிக்க வேண்டிய நிலையை இந்த நடவடிக்கை உருவாக்கியுள்ளது" என்று கண்டனம் தெரிவித்தனர்.

மேலும், பல தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள், சட்டவிரோத நிலையில் உள்ளவர்கள் இந்த இரண்டு நாட்களும் வெளியே வர வேண்டாம் என்று அறிவுறுத்தியிருந்தன.

Utopia 56 என்ற சங்கம் தனது X தளத்தில், "உள்துறை அமைச்சகத்தின் இந்தத் திடீர் கைதுப் பிரச்சாரம் முடிவுக்கு வந்துவிட்டது.

அச்சத்தைப் பரப்புவதற்கும், சுய விளம்பரத்திற்கும் பல மில்லியன் யூரோக்கள் மக்கள் பணம் வீணடிக்கப்பட்டுள்ளது," என்று விமர்சித்துள்ளது

மரண அறிவித்தல்

நீர்வேலி வடக்கு, சூரிச், Switzerland

19 Mar, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொடிகாமம், Hanau, Germany

14 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், பேர்லின், Germany

04 Apr, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு 6 ஆம் வட்டாரம், கொழும்பு, India

24 Mar, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை கிழக்கு, யாழ்ப்பாணம், Asnæs, Denmark

26 Mar, 2023
14ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, சென்னை, India, Toronto, Canada

03 Apr, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன் மேற்கு, Milton, Canada

22 Mar, 2026
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, வேலணை புளியங்கூடல், London, United Kingdom

20 Mar, 2026
நன்றி நவிலல்

பருத்தித்துறை, மாதனை, மாவிட்டபுரம், Mississauga, Canada

02 Mar, 2026
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்

தொல்புரம் கிழக்கு

23 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புளியங்கூடல், Mississauga, Canada

24 Mar, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வதிரி, முறிகண்டி, Toronto, Canada

17 Mar, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வயாவிளான், பிரான்ஸ், France

24 Mar, 2021
மரண அறிவித்தல்

பொலிகண்டி, திருகோணமலை, Toronto, Canada

21 Mar, 2026
மரண அறிவித்தல்

நீர்வேலி வடக்கு, இணுவில், Glarus, Switzerland

19 Mar, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

காங்கேசன்துறை, Pforzheim, Germany

21 Mar, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

Vasavilan, Rüdtligen-Alchenflüh, Switzerland

19 Feb, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பூந்தோட்டம், Wembley, United Kingdom

23 Mar, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Scarborough, Canada

20 Mar, 2026
மரண அறிவித்தல்

ஆனைக்கோட்டை, யாழ்ப்பாணம், தெல்லிப்பழை வீமன்காமம், வவுனியா, கொழும்பு, Toronto, Canada, Ottawa, Canada

19 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், வண்ணார்பண்ணை

23 Mar, 2025
மரண அறிவித்தல்

மாதகல், London, United Kingdom

15 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US