காசாவில் இஸ்ரேலின் தொடர் தாக்குதலில் 95 பேர் உயிரிழப்பு!
காசாவில் இஸ்ரேல் தொடர்ச்சியாக தாக்குதல்கள் மற்றும் படுகொலைகளை நடத்தி வருகிறது. வைத்தியசாலைகள், பாடசாலைகள், வீடுகள் மற்றும் பிற மக்கள் நெரிசலான இடங்கள் நேற்று (30) கடுமையான தாக்குதலினால் பாதிக்கப்பட்டன.
காசாவில் , நேற்று நடத்தப்பட்ட தாக்குதலில் மாத்திரம் 95 பேர் உயிரிழந்துள்ளதாக உறுதி செய்யப்பட்டது, அவர்களில் வடக்கு காசாவிலும் காசா நகரத்திலும் இருந்த 60 பேர் உள்ளடங்குவர்.
இதேவேளை, காசாவின் 80 சதவீதத்திற்கும் அதிகமானோர் இஸ்ரேலிய இராணுவக் கட்டுப்பாட்டில் உள்ளனர். நேற்றைய தினம் காசாவின் கடற்கரையில் இஸ்ரேலின் ராக்கெட் தாக்குதலில் 24 பேர் கொல்லப்பட்டதுடன் மற்றும் 30 பேர் காயமடைந்தனர்.
மத்திய காசாவில் உள்ள அல்-அக்ஸா வைத்தியசாலை மீது பெரிய அளவிலான தாக்குதல் நடத்தப்பட்டது. மேலும் காசா நகரின் அல்-வஹ்தா வீதிகளில் பாதசாரிகளை குறிவைத்து நடத்தப்பட்ட குண்டுவெடிப்பில் 06 பேர் கொல்லப்பட்டனர்.
கான் யூனிஸில் வீடுகள் பரவலாக அழிக்கப்படுவது தொடர்வதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இஸ்ரேலிய டாங்கிகள் வடக்கு காசாவில் தொடர்ந்து தாக்குதலை நடத்தி வருகின்றன, 18 பகுதிகளை காலி செய்ய இராணுவம் இறுதி எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஆயிரக்கணக்கான மக்கள் தங்கியிருந்த 04 பாடசாலைகள் மீது நேற்று தாக்கப்பட்டன. கான் யூனிஸில் உள்ள உணவு விநியோக மையத்தின் மீது இஸ்ரேலிய வான்வழித் தாக்குதலில் 13 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 50 பேர் காயமடைந்தனர்.
எல்லாமாக நேற்றைய நாளில் மாத்திரம் மொத்தம் 98 தாக்குதல்களில் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.