பார்வையற்றோர் பாடசாலையில் தீ விபத்து; 11 பேர் பரிதாப பலி!

Sundaresan
Report this article
உகாண்டா பார்வையற்றோர் பாடசாலையில் ஏற்பட்ட பாரிய தீ விபத்தில் 11 பேர் உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
ஆப்பிரிக்கா நாடான உகாண்டாவில் தலைநகர் கம்பாலா அருகில் முகோனா என்ற இடத்தில் பார்வையற்றோருக்காக சலாமா என்ற பெயரில் ஒரு பாடசாலை இயங்கி வருகிறது.
நேற்று முன்தினம் அங்கு அதிகாலையில் திடீரென தீப்பிடித்து பாடசாலை முழுவதும் பரவியுள்ளது. இதுகுறித்து தகவல் அறிந்ததும் தீயணைப்பு படையினர் விரைந்து சென்று தீயை போராடி அணைத்துள்ளனர்.
இருப்பினும் இந்த தீ விபத்தில் 11 பேர் கருகி உயிரிழந்துள்ளனர். படுகாயம் அடைந்தவர்கள் மீட்கப்பட்டு, அங்குள்ள ஹெரோனா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இந்தத் தீவிபத்தின் காரணம் என்ன என்பது உடனடியாக தெரியவரவில்லை. இது குறித்து அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.
மேலும் உகாண்டாவில் பாடசாலைகளில் தீ விபத்துகள் நேருவது ஒன்றும் புதிதல்ல என்பது குறிப்பிடத்தக்கது.