பெத்லகேமில் இரு வருடங்களின் பின் நத்தார் கொண்டாட்டங்கள்
உலக கிருஸ்தவ மக்கள் இன்று கிருஸ்துமஸ் தினத்தை கொண்டாடி வரும் நிலையில், இயேசு கிறிஸ்து பிறந்த இடமான பெத்லகேமில் இரண்டு வருடகால இடைவெளிக்குப் பின்னர் மீண்டும் நத்தார் கொண்டாட்டங்கள் கோலாகலமாக ஆரம்பமாகியுள்ளன.
ஜெருசலேமின் திருச்சபை பேராயர் கர்தினால் பியர்பாட்டிஸ்டா பிஸாபல்லா, ஜெருசலேமிலிருந்து பெத்லகேம் நோக்கிய தனது பாரம்பரிய ஊர்வலத்தை முன்னெடுத்தார்.

காஸாவில் உள்ள கத்தோலிக்க தேவாலயத்திற்கு சமீபத்தில் சென்று வந்த அவர், அங்கிருக்கும் மக்களின் அன்பையும், மீண்டும் வாழ்வைக் கட்டியெழுப்பும் அவர்களின் மனவுறுதியையும் பெத்லகேம் மக்களுக்கு செய்தியாகக் கொண்டு வந்தார்.
இந்தக் கொண்டாட்டங்கள் வெறும் மத நிகழ்வாக மட்டுமல்லாமல், பெத்லகேமின் பொருளாதார மீட்சிக்கான அடையாளமாகவும் பார்க்கப்படுகிறது.
பெத்லகேமின் 85 சதவீத குடும்பங்கள் சுற்றுலாவை மட்டுமே வாழ்வாதாரமாகக் கொண்டுள்ளன. கடந்த இரண்டு ஆண்டுகளாக போர் மற்றும் அரசியல் சூழலால் ஹோட்டல்கள், உணவகங்கள், நினைவுப் பரிசு கடைகள் மற்றும் போக்குவரத்து சேவைகள் முற்றிலும் முடங்கியிருந்தன.
தற்போது மீண்டும் ஆரம்படாகியுள்ள கொண்டாட்டங்கள், உள்ளூர் மக்களின் வாழ்வாதாரத்தை மீட்கும் என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.