அமெரிக்க - எகிப்திய ஜனாதிபதிபதிகள் தலைமையில் காசா அமைதி மாநாடு
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் எகிப்திய ஜனாதிபதி அப்தெல் ஃபத்தா அல்-சிசி ஆகியோர் திங்கட்கிழமை ஷர்ம் எல்-ஷேக்கில் நடைபெறும் காசா அமைதி மாநாட்டுக்கு தலைமை தாங்குவார்கள் என எகிப்திய ஜனாதிபதி அலுவலகம் சனிக்கிழமை (11) தெரிவித்துள்ளது.
இந்த மாநாடு திங்கட்கிழமை பிற்பகல் "இருபதுக்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த தலைவர்களின் பங்கேற்புடன்" நடைபெறவுள்ளது.
"காசா பகுதியில் போரை முடிவுக்குக் கொண்டுவருதல், மத்திய கிழக்கில் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை அடைவதற்கான முயற்சிகளை மேம்படுத்துதல் மற்றும் பிராந்திய பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மையின் புதிய சகாப்தத்தை உருவாக்குதல்" ஆகியன இந்த மாநாடு நோக்கமாகக் கொண்டிருக்கும்.
ஐ.நா. பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ், பிரிட்டனின் பிரதமர் கெய்ர் ஸ்டார்மர், இத்தாலிய பிரதமர் ஜியோர்ஜியா மெலோனி மற்றும் ஸ்பெயினின் பெட்ரோ சான்செஸ் ஆகியோர் கலந்துகொள்ளவுள்ளனர்.
பிரன்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோனும் அவரது வருகையை உறுதிப்படுத்தியுள்ளார்.
இஸ்ரேலின் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மாநாட்டில் பங்கேற்பாரா என உடனடி தகவல் எதுவும் வெளியாகவில்லை. அmதேவேளை, ஹமாஸ் பங்கேற்காது என தெரிவித்துள்ளது.
ஹமாஸ் அரசியல் பிரிவு உறுப்பினர் ஹொஸ்ஸம் பட்ரான், AFP-க்கு வழங்கிய நேர்காணல் ஒன்றில், பலஸ்தீன புலம்பெயர் அமைப்பு "பங்கேற்காது" என கூறினார்.
ஹமாஸ் "முன்பு காசா நிகழ்ச்சிகளில் பிரதானமாக கட்டார் மற்றும் எகிப்திய நடுவர்களின் வழியாக செயல்பட்டது" என அவர் தெரிவித்தார்.